
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் போது மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விசாரணையில் பூரண ஒத்துழைப்பினை வழங்குவது என்றும் தேவை ஏற்படின் தானே நேரில் சென்று சாட்சியமளிக்க தயார் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டிக்கான நெடுஞ்சாலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமை தொடர்பாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல இந்த கூட்டத்தில் விளக்கிக் கூறி யுள்ளார்.
Post a Comment