Ads (728x90)

ஜனா­தி­ப­தியின் தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் வவு­னியா சைவப்­பி­ர­காச மகளிர் கல்­லூ­ரியில்  நடை­பெறும் நட­மாடும் சேவையில் பங்­குபற்­று­வ­தற்­காக ஜனா­தி­பதி மற்­றும் பிர­தமர் எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்ய­வுள்­ளனர்.

தேசிய வேலைத்­திட்­டத்தின் கீழ் ஜனா­தி­பதி நட­மாடும் சேவை இவ் ஆண்டு மூன்று இடங்­களில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் அடிப்­ப­டையில் முத­லா­வது ஜனா­தி­பதி நட­மாடும் சேவை பொல­ன­று­வை­யிலும், இரண்­டா­வது நட­மாடும் சேவை காலி­யிலும் நடை­பெற்ற நிலையில் மூன்­றா­வதும் இவ்­வாண்டின் இறு­தி­யு­மான நட­மாடும் சேவை எதிர்­வரும் 21 ஆம் திகதி வவு­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந் நட­மாடும் சேவையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர குண­வர்த்­தன உள்­ளிட்ட பல அமைச்­சர்­கள் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வடக்கு மாகாண அமைச்­சர்கள் மற்றும் வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட பலரும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது வன்னிப் பகு­தியில் வசிக்கும் 5,000 மக்­க­ளுக்கு காணி உறு­திப்­பத்­தி­ரங்கள்  வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன், திவி­நெ­கும திட்­டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வாழ்­வா­தார உத­வியும், இளை­ஞர்­களின் தொழில் முயற்­சிக்­காக ஆயிரம் பேருக்­கான உதவித் திட்­டங்­களும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் இந் நட­மாடும் சேவையில் அடை­யாளஅட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனு­ம­திப்­பத்­திரம், காணி  உறு­திப்­பத்­திரம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget