
சாமர சில்வா உட்பட சில வீரர்கள் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, இவ்வாறு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாமர சில்வா உள்ளிட்ட சில வீரர்களிடம் அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாமர சில்வா உள்ளிட்ட சில வீரர்கள் மீதான விசாரணைகள் நிறையவடையும் வரை உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment