
துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமான பின் அவரது நடிப்பில் வெளியான மூன்றாவது படம் தான் 'தீவ்ரம்'. இந்தப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. மோகன்லாலின் சூப்பர்ஹிட் படமான 'ஸ்படிகம்' படத்தில் சிறுவயது மோகன்லாலாக நடித்தவரும் சமீபத்தில் வில்லன் நடிகராக அவதாரம் எடுத்தவருமான ரூபேஷ் பீதாம்பரன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குனர் ரூபேஷ் பீதாம்பரன். ஆனால் இந்தப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவில்லையாம். முதல் பாகத்திற்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத நடிகர்கள் தான் இதில் நடிக்க இருக்கிறார்களாம்.
Post a Comment