
ஆனால் பாலகிருஷ்ணாவின் லெஜன்ட் படத்திற்கு 9 விருதுகள் அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் என்பதோடு, விருதுக்கான தேர்வு குழுவில் பாலகிருஷ்ணா இடம் பெற்றிருந்ததால் அவர் நடித்த படத்திற்கு அத்தனை விருதுகள் வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின.
இதையடுத்து பாலகிருஷ்ணா விடுத்துள்ள செய்தியில், லெஜன்ட் ஒரு சாதாரண படம் அல்ல. அந்த படத்திற்கு 9 விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இத்தனை விருதுகள் கிடைக்கும்போது கலவையான விமர்சனங்கள் எழுவது சாதாரணமான விசயமே. அதனால் லெஜன்ட் படத்திற்கு எதிராக பேசப்படும் விமர்சனங்களை நான் பெரிதாக கருதவில்லை என்று தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.
Post a Comment