Ads (728x90)

மத்­தள மகிந்த ராஜ­பக்ச வானூர்தி நிலை­யம், எதிர்­வ­ரும் மார்ச் மாதம் தொடக்­கம் இந்­திய நிறு­வ­னத்­து­டன் இணைந்து இயக்­கப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

தெனி­யா­ய­வில் நடந்த நிகழ்­வி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யின் வானூர்தி நிலை­யங்­கள் மற்­றும் வானூர்­திச் சேவை­கள் அதி­கார சபை­யும், இந்­திய நிறு­வ­னம் ஒன்­றும் இணைந்து, கூட்டு முயற்­சி­யாக மத்­தள வானூர்தி நிலை­யத்தை இயக்­க­வுள்­ளன.

இந்­தக் கூட்டு முயற்சி எதிர்­வ­ரும் மார்ச் மாதம் முதல் செயற்­ப­டுத்­தப்­ப­டும்.அம்­பாந்­தோட்­டைத் துறை ­மு­கம் போன்ற அதே சூழ்­நி­லை­யி­லேயே மத்­தள வானூர்தி நிலை­ய­மும் உள்­ளது.

இதனை இலா­ப­மீட்­டும் துறை­யாக மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய நிலை­யில் வானூர்தி நிலை­யங்­கள் மற்­றும் வானூர்­திச் சேவை­கள் அதி­கா­ர­சபை இருக்­கி­றது, என்­றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget