
இந்த அறிக்கை கிடைத்த பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது பெருமளவில் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அசமந்தம் காரணமா? அல்லது ஏதேனும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திற்கும் பாரியளவில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதன்பிரகாரம் இது தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை பெற்று தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்.
எனவே இந்த அறிக்கை கிடைத்த பின்னர் அசமந்த போக்கிற்கு காரணமானவர்கள் அல்லது சதி திட்டத்திற்காக செயற்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.
Post a Comment