Ads (728x90)

தெலுங்கு சினிமாவில் பாகுபலி நாயகன் பிரபாஸ் - கோபிசந்த் ஆகிய இருவரும் நல்ல நண்பர்கள். 2004-ல் சோபன் இயக்கத்தில் தெலுங்கில் உருவான வர்ஷம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படத்தில திரிஷா நாயகியாக நடித்திருந்தார். அதையடுத்து அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை.

இந்த நிலையில், தற்போது பாகுபலி-2விற்கு பிறகு சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். கோபிசந்த் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 30-ந்தேதி வெளியாகிறது. இதையடுத்து மீண்டும் பிரபாசுடன் இணைந்து நடிக்க நல்ல ஸ்கிரிப்ட் தேடி வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கோபிசந்த்.

என்னைப்போலவே பிரபாசும் எங்களுக்கு பொருத்தமான கதை தேடிக்கொண்டு வருகிறார். அப்படி நாங்கள் எதிர்பார்க்கும் கதை ரெடியானதும் மீண்டும் இணைந்து நடிப்போம் என்கிறார் கோபிசந்த்.

Post a Comment

Recent News

Recent Posts Widget