Ads (728x90)

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனம் அடைந்துள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யக்ககூடும்.

சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மித மழையும் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 14 செ.மீ., மழையும், செம்பரம்பாக்கம் 12 செ.மீ., சென்னை விமான நிலையம் 10 செ.மீ., காஞ்சிபுரம் 9 செ.மீ., வேதாரண்யம் 9 செ.மீ மழை பெய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget