Ads (728x90)

அடுத்த ஒரு ஆண்டிற்கு பொளாதாரத்தில் மந்த நிலை நீடிக்கும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கணித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பத்திரிக்கையாளர்கள் பண மதிப்பிழப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலிளிக்கையில் :‛‛ பணமதிப்பிழப்பால் விவசாயிகள், சிறு நிறுவனங்கள், அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்பு பணத்தை பணமதிப்பிழப்பால் கட்டுபடுத்த முடியவில்லை. பொருளாதாரம் மெதுவாக சகஜநிலைக்கு மாறும் என மக்கள் எதிர்பாத்து வருகின்றனர். என்னை பொறுத்தவரை அடுத்த ஒரு ஆண்டிற்கு பொருளாதாரத்தில் மந்த நிலை தொடரும். இது பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். '' என கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget