Ads (728x90)

புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­ வ­ளிக்­கு­மாறு எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் நேரில் பகி­ரங்­கக் கோரிக்கை விடுத்­தி­ருக்­கும் நிலை­யில் மகிந்த அணி­யி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று தெரி­வித்­தார் சபை முதல்­வ­ரும் உயர் கல்வி மற்­றும் நெடுஞ்­சா­லை­கள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல.

‘‘தேசியப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண இதுவே இறு­திச் சந்­தர்ப்­பம். பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஆத­ரவு இருக்­கும்­போதே இதற்­குத் தீர்­வு­கா­ண­வேண் டும். மகிந்த அணி­யி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும்’’ என்று அவர் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று வலி­யு­றுத்­தி­னார்.

வரவு – செல­வுத் திட்­டத்­தின் குழு­நிலை மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கூட்டு அரசே எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு கோப் குழுத் தலை­வர் பத­வியை வழங்­கி­யி­ருந்­தது. முன்­னைய ஆட்­சி­க­ளின்­போது அரசை பிர­தி­நி­தித்­து­வம் செய்­ப­வர்­களே கோப் குழு­வின் தலை­வர்­க­ளாக இருந்­த­னர்.

மகிந்த ராஜ­பக்ச, அர­ச­மைப்­பின் 18ஆவது திருத்­தத்­தின் ஊடாக அதி­கா­ரங்­கள் அனைத்­தை­யும் தன் வசப்­ப­டுத்­திக்­கொண்­டார். கூட்டு அர­சின் ஊடாக நாடா­ளு­மன்­றத்­தைப் பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கண்­கா­ணிப்­புக் குழுக்­களை நிய­மித்­தோம். எதிர்க் கட்­சி­யி­னரை அதி­லும் நிய­மித்­துள்­ளோம்.
நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­ப­தற்கு மக்­கள் ஆணை­யில்லை என்று எவ­ரும் கூற­மு­டி­யாது. ஐக்­கிய தேசி­யக் கட்சி தனது தேர்­தல் மேடை­க­ளில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தா­கவே கூறி­யது.

அதற்கே மக்­கள் ஆணை வழங்­கி­யுள்­ள­னர். மனித உரிமை தொடர்­பில் பன்­னாட்டு ரீதி­யில் நாம் அடி­மைப்­பட்டு இருந்­தோம். கூட்டு அரசு ஆட்­சிக்கு வந்­த­போது மீண்­டும் பன்­னாட்டு ஆத­ர­வைப் பெற்­றுள்­ளோம். பன்­னாட்டு ஆத­ரவு இருக்­கும்­போதே தேசிய பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வேண்­டும்.

போர் நிறை­வ­டைந்த பின்­னர் மகிந்­தவே அதி­கா­ரப் பகிர்வு குறித்து முத­லில் பேசி­னார். இந்­தி­யா­வுக்­குச் சென்று உறு­தி­யும் அளித்­தார். அதற்­குத் தெரி­வுக் குழு­வை­யும் நிய­மித்­தார். அப்­போது தமிழ்த் தலை­வர்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வழங்­க­வில்லை.

மகிந்­தவே முத­லில் அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தச் சட்­டத்­தின் அதி­கா­ரம் குறைவு எனக் கூறி­யி­ருந்­தார். எனவே, மகிந்த அணி­யி­னர் புதிய அர­ச­மைப்­புக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget