பல்கலைக்கழகங்களில் மத ரீதியான கற்கை நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மதவாதிகளே தோற்றம் பெறுவார்கள். எனவே எதிர்காலத்தில் மத ரீதியான கற்கை நெறிகளுக்கு இடமளிக்கக்கூடாது.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் சட்டபீடங்கள் எதுவும் இல்லை. கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக் கழகங்களில் சட்டபீடத்தை நிறுவவேண்டும்.
பல்கலைக் கழகங்களின் ஊடாக புத்திஜீவிகளை உருவாக்கவே நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு மாறாக மதவாதிகளையோ அல்லது இனவாதிகளையோ உருவாக்கிவிடக்கூடாது.
பல்கலைக் கழகங்களில் மதக் கற்கை நெறிகளினால் மதவாதிகள் தோற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மதநெறி கற்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. மத ரீதியான கற்கை நெறிகள் கலவரங்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன.
பல்கலைகழக விரிவுரையாளர், உதவியாளர்கள் நியமனங்களின்போது தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். வெளிப்படைதன்மை பேணப்படவேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.
Post a Comment