Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கா­னத் தேர்­தல் மேலும் கால­தா­ம­த­மா­வ­தற்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாடா­ளு­மன்­றில் நேற்றுக் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டார். இத­னால் சபை­யில் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டது.
உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் எல்­லை­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை வரை­யறை செய்து, உள்­ளூ­ராட்சி மற்­றும் மாகாண சபை­கள் அமைச்சரால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று இடைக்­கா­லத் தடை விதித்­தது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற வரவு – செல­வுத்­திட்ட குழு­நிலை விவா­தத்­தின்­போது முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இதை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஒழுங்­குப் பிரச்­சி­னையை எழுப்பினார்.

‘‘உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை மக்­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர். தேர்­தல் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளி­யி­டு­கின்­றோம்’’ என்­றார் மகிந்த.

இதற்­குப் பதி­ல­ளித்த சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல, ‘‘தேர்­தல் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தற்கு நாமும் எதிர்ப்­புத் தெரி­விக்­கின்­றோம். தேர்­த­லொன்று நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டாக இருக்­கின்­றது’’ – என்­றார்.

‘‘உள்­ளூ­ராட்சி அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­தல்­கள் ஏற்­க­னவே இரண்­டரை வரு­டங்­க­ளாக நடத்­தப்­ப­டா­மல் இருப்­ப­து­டன், தற்­போது அது 3 வரு­டங்­க­ளா­கப் போகின்­றது. இந்த விட­யத்­தால் நாட்­டில் பெரும் பதற்­ற­மொன்று ஏற்­பட்­டுள்­ளது. இது சிறு தேர்­த­லொன்றே. அதை அர­சு­தான் காலம் தாழ்த்­தி­யுள்­ளது. இதற்­கான முழுப் பொறுப்­பும் அர­சையே சாரும்’’ என்­றும் மகிந்த கூறி­னார்.
அமைச்­சர்­க­ளின் செய­லர்­கள் மற்­றும் நெருக்­க­மா­ன­வர்­கள் இந்த வழக்­கு­களை முன்­வைத்­தி­ருந்­த­னர் என்­பது மிகத் தெளி­வாக இருக்­கின்­றது. தேர்­தலை காலம் தாழ்த்த அரசு எடுத்­துள்ள முயற்­சி­க­ளின் விளை­வா­கவே இவை அனைத்­தும் இடம்­பெ­று­வ­தாக எதிர்க்­கட்­சி­யின் பிர­தம கொற­டா­வும் ஜே.வி.பி. தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்­தார்.

‘‘தேர்­தல் கூடிய விரை­வில் நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்­பதே எங்­க­ளது தேவை­யாக இருக்­கின்­றது. இந்த விட­யத்­தில் நீதி­மன்­றத்­தைத் தவ­றாக பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் எதிர்­கின்­றோம்’’ என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்­லாது, 2015ஆம் ஆண்டு இந்த அரசை ஆட்­சிக்­குக் கொண்டு வரு­வ­தற்கு செயற்­பட்ட அனை­வ­ரும் தற்­போ­தைய இந்த நிலை­மைக்­குப் பொறுப்­புக்­கூற வேண்­டும் என்று மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தெரி­வித்­தார்.

எவ்­வா­றி­ருப்­பி­னும், இந்த விட­யத்தை தற்­போது விவா­தப் பொரு­ளாக்­கிக் கொள்­ள­மு­டி­யாது என்று அந்­தச் சந்­தர்ப்­பத்­தில் சபைக்கு தலைமை தாங்­கிக் கொண்­டி­ருந்த பிரதி சபா­நா­ய­கர் திலங்க சும­தி­பால தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget