Ads (728x90)

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று, 8 மீனவ கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். நேற்று காலை முதல் நடந்த இந்த மறியல் போராட்டம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்களில் 180 பேர் லட்சத்தீவு அருகே இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

17 படகுகளுடன் சென்ற 180 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உள்ள மீனவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர இந்திய கடற்படை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget