Ads (728x90)

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களின் போது தபால் மூலம் வாக்­க­ளிக்க விரும்­புவோர் அது தொடர்பில் விண்­ணப்­பிக்க வேண்­டிய கால எல்­லையை நீடிக்க தேர்­தல்கள் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது.

அதன்­படி பெரும்­பாலும் எதிர்­வரும் 22 ஆம் திக­தி­வரை விண்­ணப்ப கால எல்­லையை வழங்­கு­வது தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக சட்டம் மற்றும் விசா­ரணை பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பான மேல­திக தேர்­தல்கள் ஆணை­யாளர் எம்.எம்.மொஹம்மட் தெரி­வித்தார். பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டே அவர் இதனைத் தெரி­வித்தார்.

  அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

 21 மாவட்­டங்­களில் இன்று ( நேற்று) வேட்பு மனு கோரும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின. கிளி­நொச்சி, முல்லை தீவு, மன்னார் மற்றும் வவு­னியா தவிர்ந்த ஏனைய மாவட்­டங்­க­ளி­லேயே இந் நட­வ­டிக்­கைகள் ஆரம்­ப­மா­கின. அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் இடம்­பெறும் அம்­பாறை மற்றும் பதுளை மாவட்­டங்­களில் விஷே­ட­மாக வேட்­பு­மனு தாக்கல்  செய்யும் நட­வ­டிக்­கைகள் இன்று (நேற்று) இடம்­பெற்­றன.

  கட்­டுப்­பணம் செலுத்தும் நட­வ­டிக்­கைகள் நாளை 13 ஆம் திகதி நண்­பகல் 12.00 மணி­யுடன் நிறை­வுக்கு வரு­கின்­றது. கடந்­த­வார இறு­தியில் கட்­டுப்­பணம் செலுத்தும் நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றாத நிலையில் நேற்று அந் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­ற­தாக அறிய முடி­கின்­றது.

 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்­புக்­கான விண்­ணப்ப இறுதி திகதி எதிர்­வரும் 15 ஆம் திகதி நள்­ளி­ரவு 12.00 மணி­யுடன் நிறை­வ­டை­கி­றது. எனினும் 248 உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பி­லான விண்­ணப்ப திகதி வித்­தி­யா­சப்­ப­டு­வதால், மொத்­த­மாக 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கும் என பொது­வான ஒரு விண்­ணப்ப முடிவுத் திக­தியை நிர்­ண­யிப்­பது குறித்து தேர்­தல்கள் ஆணைக் குழுவின் கவனம் திரும்­பி­யுள்­ளது.

அதனால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதித் திகதியை 22 ஆம் திகதிவரை நீடிக்க ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. இன்று ( நேற்று) இடம்பெறும் கூட்டத்தில்  அது தொடர்பில் முடிவு செய்யப்படும்  என்றார்

Post a Comment

Recent News

Recent Posts Widget