Ads (728x90)

248 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலை­யில், முதன்மை அர­சி­யல் கட்­சி­கள் நேற்று முதல் கட்­டுப்­ப­ணம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்சி கொழும்பு உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளி­லும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மாத்­த­றை­யி­லும் நேற்­றுக் கட்­டுப்­ப­ணம் செலுத்­தின.
கடந்த நவம்­பர் 27ஆம் திகதி முதல் கட்­ட­மாக தேர்­தல் அறி­விப்பு விடுக்­கப்­பட்ட 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்­று­முன்­தி­னம் நண்­ப­க­லு­டன் நிறை­வுக்கு வந்­தது.

இரண்­டாம் கட்­ட­மாக டிசம்­பர் 4ஆம் திகதி அறி­விப்பு விடுக்­கப்­பட்ட 248 சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் நாளை­ம­று­தி­னம் 18ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­தச் சபை­க­ளுக்­கான கட்­டுப்­ப­ணமே தற்­போது செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget