Ads (728x90)

93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­காக 30 அர­சி­யல் கட்­சி­க­ளும், 49 சுயேச்­சைக் குழுக்­க­ளும் தாக்­கல் செய்­துள்ள வேட்­பு­ம­னுக்­க­ளில், 496 வேட்­பு­ம­னுக்­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று தேர்­தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.
21 மாவட்­டங்­க­ளி­லுள்ள 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கு­மான வேட்­பு­ம­னுக்­களை ஏற்­றுக்­கொள்­ளு­தல் நேற்­று­முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை நண்­ப­க­லு­டன் நிறை­வுக்கு வந்­தது.

அர­சி­யல் கட்­சி­க­ளி­னால் 466 வேட்­பு­ம­னுக்­க­ளும், சுயேச்­சைக் குழுக்­க­ளி­னால் 57 வேட்­பு­ம­னுக்­க­ளும் என்று மொத்­த­மாக 523 வேட்­பு­ம­னுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. இதில், அர­சி­யல் கட்­சி­க­ளி­னால் தாக்­கல் செய்­யப்­பட்ட 19 வேட்­பு­ம­னுக்­க­ளும், சுயேச்­சைக் குழுக்­க­ளி­னால் தாக்­கல் செய்­யப்­பட்ட 8 வேட்­பு­ம­னுக்­க­ளும் நிரா­க­ரிக்­கப்­பட் டன.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யா­னது 92 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி 25 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கும், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி 61 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கும், சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி 78 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி 11 சபை­க­ளுக்­கும் தனித்­த­னி­யாக வேட்­பு­ம­னுக்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ளன என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget