Ads (728x90)

2018ஆம் ஆண்­டுக்­கான வடக்கு மாகாண சபை­யின் நிதி ஒதுக்­கீட்டு நிய­திச்­சட்­டம் (வரவு செல­வுத் திட்­டம்) மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்டது.

இந்த நிய­திச் சட்ட அறிக்­கையை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கடந்த 5ஆம் திகதி மாகாண சபை அமர்­வில் முன்­மொ­ழிந்­தார்.

அடுத்­தாண்­டுக்­கான நிதி ஒதுக்­கீட்­டில் ஒவ்­வொரு அமைச்­சு­கள் மீதான விவா­தங்­க­ளும் மூன்று தினங்­கள் இடம்­பெற்று நேற்­று­டன் நிறை­வ­டைந்­தது.
மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் வழி­மொ­ழிய உறுப்­பி­னர்­க­ளின் முழு­மை­யான ஆத­ர­வு­டன் வரவு செல­வுத் திட்­டம் ஏக­ம­ன­தாக அது நிறை­வேற்­றப்­பட்­டது.

வரவு செல­வுத் திட்­டத்­தின் நேற்­றைய அமர்­வின் இறு­தி­யில் மாகாண முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள், அதி­கா­ரி­கள் போன்­ற­வர்­க­ளுக்கு அவைத் தலை­வர் நன்றி தெரி­வித்­தார். அது­மட்­டு­மன்றி முத­ல­மைச்­ச­ரும் அவைத் தலை­வ­ரும் மாறி மாறி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

தொடர்ந்து வடக்கு மாகாண சபை­யின் அடுத்த அமர்வு எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி இடம்­பெ­றும் என்று அவைத் தலை­வர் அறி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget