Ads (728x90)

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தீவிர பரப்­பு­ரைக் கூட்­டங்­களை முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள் ஜன­வரி முதல் வார­த்­தில் ஆரம்­பிக்­க­வுள்­ளன.

எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 10ஆம் திகதி 341 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. வேட்­பு­ம­னுத் தாக்­கல் அனைத்­தும் கடந்த 21ஆம் திக­தி­யு­டன் நிறை­வுக்கு வந்த கையோடு தேர்­தல் குறித்த கலந்­து­ரை­யா­டல்­களை கிராம மட்­டத்­தில் கட்­சி­கள் ஆரம்­பித்­தி­ருந்­தன.

அத்­து­டன், சிறி­ய­ள­வி­லான கூட்­டங்­க­ளும் நடை­பெற்று வரு­கின்­றன. ஜன­வரி முதல் பெரி­ய­ள­வி­லான கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி தமது பரப்­பு­ரைக் கூட்­டத்தை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கண்­டி­யில் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேர்­தல் பரப்­பு­ரையை இம்­முறை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சி­யின் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்­ளார்.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச சுதந்­தி­ரக் கட்­சி­யில் போட்­டி­யிட்­டி­ருந்­த­தால் தேர்­தல் பரப்­புரை நட­வ­டிக்­கை­க­ளில் இருந்து அரச தலை­வர் மைத்­திரி ஒதுங்­கி­யி­ருந்­தார்.

இந்­த­முறை மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆத­ரவு அணி­யால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பொது மக்­கள் முன்­னணி தனித்­துக் கள­மி­றங்­கி­யுள்­ள­தால் சுதந்­தி­ரக் கட்­சிக்­குப் பெரும் தலை­யி­டி­யா­கி­யுள்­ளது. அத­னால் மைத்­தி­ரியே நேர­டி­யா­கக் கள­மி­றங்­க­வுள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget