Ads (728x90)


Image result for சி.வி.கே.சிவ­ஞா­னம்

தமி­ழ­ரசு கட்சி என்­றும் விடு­த­லைப்­பு­லி­க­ ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. என்­றைக்­கும் விடு­த­லைப்­பு­லி­களை புறக்­க­ணிக்­க­வுமில்லை. இவ்­வாறு தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் இணைச் செய­லரும், வட­மா­காண சபை அவைத் தலை­வ­ரு­மான சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்தார்.

யாழ்.மார்ட்­டீன் வீதி­யில் அமைந்­துள்ள தமி­ழ­ரசு கட்­சி­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்பு இடம்­பெற்­றது.

அதில் கடந்த நாடா­ளு­மன்ற தேர்­த­லில் புனர்­வாழ்வு பெற்ற முன்­னாள் விடு­த­லைப் புலி­க­ளின் போரா­ளி­க­ளுக்கு ஆச­னம் ஏன் வழங்­க­வில்லை என ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேள்வி எழுப்­பிய போதே அவர் இவ்­வாறு பதில் அளித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது:

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பையோ, அதன் உறுப்­பி­னர்­க­ளையோ என்­றைக்­கும் தமி­ழ­ரசு கட்சி புறக்­க­ணிக்­க­வில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அவர்­கள் ஆச­னம் கேட்­டது உண்மை. அப்­போ­தைய சூழ­லில் அதனை வழங்க முடி­ய­வில்லை.

இருந்த போதி­லும் தேர்­த­லுக்­குப் பின்­ன­ரான காலப் பகுதி முதல் தற்­போது வரை நாம் ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்­சி­யு­டன் நெருக்­க­மா­கவே உள்­ளோம். என்­றார்.

அதன் போது, விடு­த­லைப் புலி­க­ளின் உண்­மை­யான போரா­ளி­கள் போரிட்டு வீரச்­சா­வ­டைந்­த­னர். ஏனை­யோர் “சைனட்” கடித்து வீரச்­சா­வைத் தழு­விக்­கொண்­ட­னர் என தமி­ழ­ரசு கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தெரி­வித்த கருத்து தொடர்­பில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

அது, குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரின் தனிப்­பட்ட கருத்து. தனிப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனிப்­பட்ட கருத்­துக்­கள் உண்டு. அதனை அவர்­கள் தெரி­விக்­க­லாம். அது கட்­சி­யின் கருத்­தல்ல. தமி­ழ­ரசு கட்சி என்­றைக்­கும் விடுலை புலி­களை எதிர்த்­தது இல்லை – என்று சி.வி.கே. சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget