Ads (728x90)

சாவ­கச்­சேரி நகர சபை தவிர்ந்த வடக்­கில் உள்ள ஏனைய சபை­க­ளுக்கு நாளை­ம­று­தி­னம் புதன் கிழ­மையே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி வேட்­பு­ம­னுத் தாக்­கல் செய்­ய­வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

நாடு முழு­வ­தி­லும் உள்ள 248 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 21ஆம் திகதி நண்­ப­கல் 12 மணி­யு­டன் வேட்­பு­ம­னுத் தாக்­கல் நிறை­வ­டை­ய­வுள்­ளது.

வடக்­கில் சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் ஏற்­க­னவே நிறை­வுற்­றுள்­ளது. எஞ்­சிய சபை­க­ளுக்­கான வேட்பு மனுக்­க­ளைத் தயா­ரிக்­கும் நட­வ­டிக்­கை­கள் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பட்­டி­யலை இறு­திப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை இன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. இந்த நிலை­யில் நாளை­ம­று­தி­னம் புதன் கிழமை வடக்­கில் 5 மாவட்­டங்­க­ளி­லும் வேட்­பு­ம­னுத் தாக்­கல் இடம்­பெ­றும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget