Ads (728x90)

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட அரச தலை­வர் ஆணைக்­குழு தனது இறுதி அறிக்­கையை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் நேற்­றுக் கைய­ளித்­தது.

முதன்மை சந்­தேகநபர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட் டுள்­ள­தால் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது கொழும்பு அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்­பை­யும், எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

முக்­கிய அர­சி­யல் புள்­ளி­க­ளும் விசா­ரணைப் பொறிக்­குள் சிக்­கி­யி­ ருப்­ப­தால் இது விட­யம் தொடர்­பில் அடுத்­த­கட்ட சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக விசா­ரணை அறிக்கை சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அறிக்­கை­யி­லுள்ள பரிந்­து­ரை­களை ஆராய்ந்த பின்­னர், தனது சட்ட ஆலோ­ச­கர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­விட்டே சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் அறிக்­கையை அரச தலை­வர் மைத்­திரி ஒப்­ப­டைக்­க­வுள்­ளார்.

நீதி­யான விசா­ர­ணை­கள் முடி­யும் வரை நிதித்­து­றை­யு­டன் தொடர்­பு­டைய முக்­கிய அரச நிறு­வ­னங்­களை தனது கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வ­ரு­வது தொடர்­பில் தனது ஆலோ­ச­கர்­க­ளு­டன் அரச தலை­வர் நேற்று நீண்ட நேரம் மந்­தி­ரா­லோ­சனை நடத்­தி­யுள்­ளார் என­வும் அறி­ய­மு­டிந்­தது.

பிணை­முறி மோச­டி­கள் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ளும் வித­மாக அரச தலை­வர் ஆணைக்­குழு இவ்­வ­ரு­டம் பெப்­ர­வரி மாதம் 21ஆம் திகதி நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­மு­றி­யு­டன் தொடர்­பு­பட்ட மத்­திய வங்­கி­யின் பிர­தா­னி­கள், முதன் நிலை நிறு­வ­னங்­கள், அமைச்­சர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள் என்று மொத்­த­மாக 63 பேரி­டம் ஆணைக்­குழு விசா­ர­ணை­களை நடத்­தி­யி­ருந்­தது.
ஆரம்­பத்­தில் மூன்று மாதங்­க­ளுக்­குள் விசா­ர­ணை­க­ளைப் பூர்த்தி செய்ய வேண்­டும் என்று அரச தலை­வர் பணிப்­புரை விடுத்­தி­ருந்­த­போ­தி­லும் பிணை­முறி ஏலத்­தில் பல்­வேறு அரச பிர­தா­னி­கள் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­மை­யால் விசா­ர­ணைக் காலத்தை நீடிக்க வேண்­டும் என்று ஆணைக்­குழு கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

தொடர்ந்து நான்கு தட­வை­கள் கால­நீ­டிப்பு வழங்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­வின் விசா­ர­ணை­கள் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் சாட்­சி­யப் பதி­வு­க­ளோடு நிறை­வ­டைந்­தி­ருந்­தது.

பிணை­முறி மோசடி தொடர்­பில் விசா­ர­ணை­களை செய்­வ­தற்­காக அரச தலை­வ­ரி­னால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ் ஜெய­வர்­தன மற்­றும் ஓய்­வு­பெற்ற உதவி கணக்­காய்­வா­ளர் நாய­கம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகி­யோர் முன்­னி­லை­யாகி விசா­ர­ணை­க­ளுக்கு தலைமை தாங்­கி­யி­ருந்­த­னர். அத்­தோடு அரச சட்­டத்­த­ர­ணி­கள் சார்­பில் மூத்த மேல­திக சொலி­சிற்­றர் ஜென­ரல் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி டப்­புல டி லிவேரா தலை­மைத் தாங்­கி­யி­ருந்­த­னர்.

கடந்த சில நாள்­க­ளுக்கு முன்­னர் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன துய அரசை உரு­வாக்க எது செய்­ய­வும் துணி­வேன், அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுப்­பேன் என்று தெரி­வித்­தி­ருந்­தார். தற்­போது பிணை முறி மோசடி விசா­ரணை அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து அவ­ரது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் பெரும் எதிர்­பார்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget