Ads (728x90)

உள்­ளூராட்சி சபைத் தேர்­த­லுக்­கான முதற் கட்ட வேட்பு மனுத் தாக்­கல் நேற்று ஆரம்­ப­மா­கி­யது. இது எதிர்­வ­ரும் 14ஆம் திகதி நண்­ப­கல் 12 மணி வரை இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தக் காலப் பகு­தி­யில் தேர்­தல் கட­மை­யில் 10 ஆயி­ரம் பொலி­ஸாரை ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் பொலிஸ் அத்­தி­யட்­சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரிவித்­த­தா­வது:

வேட்பு மனு தாக்­கல் ஆரம்­பிக்­கும் நாள் முதல் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­கள் கட்­டளை சட்­டத்­தின் கீழ் பொலி­ஸார் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

முதல் கட்ட வேட்பு மனுத் தாக்­கல் இடம்­பெ­றும் 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் தொடர்­பில் பெரும்­பா­லும் இறுதி நாளான 14ஆம் திகதி வேட்பு மனுத் தாக்­கல் இடம்­பெ­ற­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அன்­றைய தின­மும் இந்­தக் காலப் பகு­தி­யி­லும் முதல் கட்­ட­மாக 10 ஆயி­ரம் பொலி­ஸார் அந்­தந்­தப் பகு­தி­க­ளில் கட­மை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.
இரண்­டாம் கட்ட வேட்பு மனுத் தாக்­க­லின்­போது அந்­தப் பகு­தி­க­ளுக்கு வேறா­கப் பாது­காப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­ப­டும்.இன்று கல்­விப் பொதுத்­த­ரா­தர சாத­ரண தரப் பரீட்­சை­கள் ஆரம்­ப­மா­கின்­றன. அது எதிர்­வ­ரும் 21ஆம் திக­தி­வரை இடம்­பெ­றும்.

இந்­தக் காலப் பகு­தி­யில் பரப்­புரை நட­வ­டிக்கை ஊடா­கவோ, வேறு நட­வ­டிக்­கை­கள் ஊடா­கவோ பரீட்­சை­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் எந்­த­வொரு நப­ருக்­கும் எதி­ராக கடு­மை­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். அவ்­வாறு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வோர் தகுதி தரா­த­ரம் பாராது கைது செய்­யப்­ப­டு­வர்.
இம்­முறை ஒலி­பெ­ருக்கி பயன்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­மதி தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் நடை­பெ­றும் இடத்­துக்கு மட்­டுமே வழங்­கப்­ப­டும். அந்த இடம் தவிர ஏனைய இடங்­க­ளில் மெகா மைக்­ரோ­போன், ஒலி­பெ­ருக்கி உள்­ளிட்ட ஒலியை பெருக்­கும் எந்த சாத­னங்­க­ளை­யும் பயன்­ப­டுத்த முடி­யாது.

வாக­னக்­க­ளில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்­டிக்­கொன்டு பரப்­புரை செய்­ய­வும் முடி­யாது. அதற்கு எந்­த­வ­கை­யி­லும் அனு­மதி வழங்­கப்­ப­டாது.பரப்­பு­ரைக் கூட்­டத்­துக்கு ஒலி பெருக்கி பாவ­னைக்­கான அனு­ம­தியை வழங்­கும்­போது கடும் நடை­மு­றை­கள் இருக்­கும். எமது அதி­கா­ரி­கள் முத­லில் பரப்­பு­ரைக் கூட்­டம் நடை­பெ­றும் இடத்தை பார்­வை­யி­டு­வார்.

அந்த இடம் சாதா­ரண தர பரீட்சை இடம்­பெ­றும் நிலை­யங்­க­ளுக்கு அண்­மை­யில் இருக்­கவே கூடாது. அவ்­வாறு இருப்­பின் அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது. குறித்த பரப்­புரை இடங்­க­ளில்­கூட ஒலி பெருக்­கிச் சத்­த­மா­னது வெளி­யில் செல்­லா­த­வாறு அமை­யப்­பெற்­றி­ருத்­தல் வேண்­டும்.

ஒலி­பெ­ருக்­கி­கள் பரப்­பு­ரைப் பிர­தே­சத்தை நோக்­கி­ய­தாக மட்­டுமே பொருத்­தப்­பட்­டி­ருத்­தல் வேண்­டும்.

திங்­கள் முதல் வியா­ழன் வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை­யும், வெள்ளி, சனிக்­கி­ழ­மை­க­ளில் காலை 6 மணி முதல் மறு நாள் அதி­காலை 1 மணி வரை­யி­லும் ஞாயிறு தினங்­க­ளில் காலை 6.00 மணி முதல் மறு நாள் அதி­காலை 12.30 மணி வரை­யி­லுமே ஒலி பெருக்கி பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­டும்.

தேர்­தல்­கள் தொடர்­பான முறைப்­பா­டு­கள் உள்­ளிட்­ட­வற்றை மேற்­கொள்ள நாட­ளா­விய ரீதி­யில் உள்ள 42 பொலிஸ் பிரி­வு­க­ளை­யும் உள்­ள­டக்கி பொலிஸ் தேர்­தல்­கள் காரி­யா­ல­யம் நேற்று முதல் இயங்க ஆரம்­பித்­துள்­ளது.

பொலிஸ் தலை­மை­ய­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் தேர்­தல்­கள் செய­ல­கம் ஊடாக இந்த 42 காரி­யா­ல­யங்­க­ளும் நிர்­வ­கிக்­கப்­ப­டும். தேர்­தல்­கள் தொடர்­பில் தக­வல்­களை வழங்க பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ள­ருக்கு மட்­டும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget