Ads (728x90)

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­சபைத் தேர்­தலில், தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஏனைய செல­வு­க­ளுக்­காக 74 கோடி ­ரூபா பணம் செல­விட வேண்­டி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வரவு - செலவுத் திட்­டத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதிக்கு மேல­தி­க­மா­கவே இந்த பெருந்­தொகை நிதி தேவைப்­ப­டு­வ­தா­கவும் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் தொகை 4000க்கும் அதி­க­மா­கி­யுள்­ளதால் இவ்­வாறு  அதி­க­ரிக்­க­வுள்ள உறுப்­பி­னர்­க­ளது கொடுப்­ப­னவு உள்­ளிட்ட ஏனைய செல­வு­க­ளுக்­கான பணத்தை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் எதிர்­வரும் இரு வாரங்­களில் அமைச்­ச­ர­வையில் பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

அந்­தந்த தொகு­தி­களில் கூட்­டங்­களை நடத்த கேட்­போர்­கூ­டங்­களை அவர்­களே செய்­து­கொள்ள  வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவ்­வா­றான தேவை­யு­டைய தொகு­தி­க­ளுக்கு நிதி­யினை வழங்­க­வேண்­டி­யுள்­ள­தா­கவும் அத்­தோடு பிர­தே­ச­சபை உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு மாதாந்தம் 15ஆயிரம் ரூபாவும் நகர மற்றும் மாந­க­ர­சபை உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு மாதாந்தம் 20ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது நடை­பெறும் தொகுதி மற்றும் விகி­தா­சாரம் கலந்த புதிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெறுவதால் உறுப்பினர்களது தொகையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாகவே இவ்வளவு பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget