Ads (728x90)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் கருத்து முரண்பாடு தற்காலிகமான ஒன்று எனவும், நேரம் வரும் போது ஜனாதிபதியை சூழ அனைவரும் ஒன்றுபடுவார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் எப்பொழுதும் இல்லாத ஜனநாயகம் தற்பொழுது காணப்படுகின்றது. கட்சிக்குள் பல கருத்துக்களும், பல வாதங்களும் உள்ளன. இவை அனைத்தும் தற்காலிகமானது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிகையை வென்ற ஒரே தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். இறுதி நேரத்தில் அவரை அனைவரும் வந்து சூழ்ந்து கொள்வார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget