Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தயாரில்லை என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் அரசியல் அமைப்பு குழப்ப நிலைமைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கூற்றுக்களில் எவ்வித நம்பிக்கையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget