
பொறின் பொலிஸி( Foreign Policy) என்ற அமெரிக்காவின் செய்தித்தளம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு விரோதமாக செயற்பட்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை கவிழ்த்தார்.
இதனையடுத்து சட்டவிரோதமாக மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். எனினும் அவரால் அந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை.
இது அவரைப் பொறுத்த வரையில் தோல்வியாக கருதப்படுகிறது எனினும் அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக இல்லை.
அதேபோன்று அவரால் நியமிக்கப்பட்ட மஹிந்தவும் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
எனவே இருவரும் தாம் தீர்மானித்த தேர்தல் ஒன்றுக்கு செல்வதையே குறியாக கொண்டுள்ளனர். அதன்மூலம் மீண்டும் தாங்கள் ஆட்சியை பிடிக்கலாம் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளது என்று அமெரிக்க செய்தித்தளம் கூறுகிறது.
Post a Comment