Ads (728x90)

க.பொத சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அடையாள அட்டைகனை விநியோகிக்கும் பணி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக விசேட தினம் இம்முறை அறிவிக்கப்பட மாட்டாது என்று ஆட்களை பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

தற்பொழுது புதிதாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக மூன்று இலட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன. தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான வயது எல்லையை 15 ஆக குறைந்ததன் காரணமாக விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரையில் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அல்லது அதில் ஏதெனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என எண்ணுவோர் விரைவாக திணைக்களத்திற்கு வருகை தந்து அவற்றை தயார் செய்து கொள்ளுமாறு ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

Recent News

Recent Posts Widget