Ads (728x90)

பாராளுமன்றத்திற்குள் கடந்த நவம்பர் மாதம் 14,15,16ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்திருப்பதாக விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 54 பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐ.தே.கவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், ஜே.வி.பி.யை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு தவறிழைத்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியற்கட்டளை 77 இன் கீழ் தவறிழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுயாதீன விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, அவற்றை விரைவில் பூர்த்தி செய்து சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 14, 15,16ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக பிரதி சாபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவே இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிழைத்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ்.பி. திசாநாயக்க, ஆனந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, பியல் நிஷாந்த, பத்ம உதயசாந்த, டிலான் பெரேரா, தினேஷ் குணவர்தன, லொஹான் ரத்வத்த, ஜயந்த சமரவீர, ரோஹித அபேகுணவர்தன, திலங்க சுமதிபால, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சிசிர ஜெயக்கொடி, காஞ்சன விஜய சேகர, பிரியங்கர ஜயரட்ண, சுசந்த புஞ்சிநிலமே, பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அளுத்கமகே, ரஞ்சித் சொய்சா, எஸ்.எம்.சந்திரசேன, டி.பி சானக, அருந்திக பெர்னாண்டோ, டளஸ் அழகபெரும, விமலவீர திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, தேனுக்க விதானகமகே, அனுராத ஜெயரத்ன, சாரரதி துஸ்மந்த, சனத் நிஷாந்த, நிமல் லான்ஸா, விஜித பேருகொட, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜனக பண்டார, ரொமேஷ் பத்திரன, மொஹான் பிரியதர்ஷன, ரோஷன் ரணசிங்க, வாசுதேவ நாணயக்கார, சி.பி. ரத்நாயக, ரி.பி.ஏக்கநாயக, லக்ஷ்மன் யாப்பா, தாரக பாலசூரிய. லக்ஷ்மன் வசந்த பெரேரா, ஜனக பண்டார தென்னக்கோன், ஜானக்க வக்கும்புற, பந்துல குணவர்தன, நிசாந்த முதுஹெட்டிகம, சாலிந்த திசாநாயக, பிரேமலால் ஜெயசேகர, திலிப் ஆராய்ச்சி, நிரோஷன் பிரேமரத்ன, விஜித பேருகொட, பிரியங்கர ஜெயரத்ன, பாலித தெவரப்பெரும, சந்திம கமகே, ரஞ்சன் ராமநாயக்க, துஷார இந்துனில், விஜித ஹேரத் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget