Ads (728x90)

நாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை எனவும், பிறப்புச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களில் ஐந்தில் ஒன்று போலியானது என கண்டறியப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் என்.சி. விதானகே தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்காகவும் வங்கிக்கடன்களை பெறுவது உள்ளிட்ட பல தேவைகளுக்காக இவ்வாறான போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் இந்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அனைத்து காணி உறுதிப்பத்திரங்கள், பிறப்புச் சான்றிதழ்களை கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget