புங்குடுதீவுப் பகுதியில் கற்றாழைகளை களவாக பிடுங்கி சென்ற தென் இலங்கையை சேர்ந்த இரு வியாபாரிகள் மண்டைதீவு சந்தியில் வைத்து பொலிஸாரினால் பிடிக்கப்பட்டனர். இச்சம்பவம் மண்டைதீவு சந்தியில் இன்று மதியம் இடம் பெற்றது.
யாழ்ப்பாணம்-புங்குடுதீவு பகுதியில் உள்ள கற்றாழைகளை தென்னிலங்கை வியாபாரிகள் களவாக பிடுங்கி வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த வாகனத்தை மறிக்க முற்பட்ட போது தப்பித்து சென்றுள்ளனர்.
இதனால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு மண்டைதீவு சந்தியில் வைத்து இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர். ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்படட சந்தேக நபர்களையும், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தினையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment