Ads (728x90)

22 ஆயிரம் பட்டதாரிகள் விரைவில் அரச சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமா காண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் இதற்கான ஆட்களை இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை அபிவிருத்தி நிதியத்தை அமைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது அரசின் கீழ் 22 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளும் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget