Ads (728x90)

நரேந்திரமோடி இன்று வியாழக்கிழமை மீண்டும் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கின்றார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2 ஆவது முறையாக பிரதமர் ஆகின்றார்.

இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க  இடம்பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்தபோது கூட்டணி கட்சிகளையும் மந்திரிசபையில் சேர்த்துக்கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா, கூட்டணி அரசு அமைக்கின்றது.

பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், சத்தியப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget