கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவுக்கே நேற்று பிற்பகல் 3.00 மணி வரை இந்த 21 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.இதவேளை இவர்கள் மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளை ஏற்க பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் அவர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Post a Comment