விவசாய அமைச்சு உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து உயர்ந்த ரக அரிசியை உற்பத்தி செய்து இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
இதன் முதற்கட்டம் அநுராதபுர மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளதோடு, 5 ஆம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கு அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக அநுராதபுரத்தில் 500 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கு விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment