Ads (728x90)

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நேற்று மாலை பேர்மிங்கமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை பெற்றது.

338 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பில் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

10 ஓவரில் 28 ஓட்டத்தையும், 20 ஓவரில் 83 ஓட்டத்தையும் இந்திய அணி பெற்றது. இதனிடையே 19 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 28.2 ஆவது ஓவரில் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் களமிறங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி 30 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 152 ஓட்டத்தையும், 35 ஓவரில் 188 ஓட்டத்தையும் பெற்றது.

இதனிடையே ரோகித் சர்மா 34.4 ஆவது ஓவரில் சதம் விளாசினார். எனினும் அவர் 36.1 ஆவது ஓவரில் மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 102 ஓட்டத்துடன் கிறிஸ் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க மறுமுணையில் ரிஷாத் பந்த் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 32 ஓட்டத்துடன் 39.1 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

45 ஆவது ஓவரின் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 267 ஓட்டங்களை பெற்றிருந்தது. வெற்றிக்கு 30 பந்துகளில் 71 ஓட்டம் என்ற கடினமான நிலையில் இந்திய அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.


Post a Comment

Recent News

Recent Posts Widget