Ads (728x90)

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 39 ஆவது போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.

339 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 23 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget