Ads (728x90)

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

நிதியமைச்சினூடாக குறிப்பிட்டதொகை நிதிப் பங்களிப்புடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.   யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்த விமான நிலையத்தின் மூலம் இந்தியாவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயனம் செய்வதற்கான வழி கிடைத்துள்ளது. 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த விமானப் போக்குவரத்துக்கான கட்டணக் குறைப்பு தொடர்பில் நான் கவனமெடுப்பேன் என்றார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget