Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட 16 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமனப் பெயர்ப் பட்டியலில் உள்ளவாங்கப்படாத அதாவது, 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நியமனம் கிடைக்காத பட்டதாரி மாணவர்களான உயர் தொழில்நுட்பக் க ல்லூரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் மாணவர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கலந்து கொண்ட பட்டதாரிகள் வெளிவாரி, உள்வாரி என்ற பாகுபாடு காட்டாதே, பதிவு செய்யப்படாத மாணவர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள், பட்டம் முடித்த பட்டதாரி மாணவர்களை புறக்கணிக்காமல் உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கு போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை யாழ்.மாவட்ட செலயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறீதரன் பட்டதாரி மாணவர்களின் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களை சந்தித்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget