Ads (728x90)

நாட்டுக்கான ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, முதல் நிகழ்வாக பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

175 மில்லியன் ரூபா செலவில் இரண்டு வருடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தில் 500 மீன்பிடி படகுகளை நிறுத்தி வைப்பதற்கேற்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், அமைச்சர் பீ.ஹரீசன், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget