தேசிய கல்வியற் கல்லூரியில் 2015/2017 கல்வியாண்டில் டிப்ளோமா பட்டம் பெற்ற 4,286 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நியமனங்களை வழங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் கல்வி துறையை தற்போதைய அரசாங்கம் நவீனமயப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி துறையின் மனித வள மற்றும் பௌதீக வள வளர்ச்சிக்காக தற்போதைய அரசாங்கம் பாரிய அர்ப்பணிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 4286 டிப்ளோமாதாரிகளில் சிங்கள மொழிமூலமான டிப்ளோமாதாரிகள் 2340 பேருக்கும், தமிழ் மொழி மூலமானவர்கள் 1300 பேருக்கும், ஆங்கில மொழிமூலமானவர்கள் 646 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment