Ads (728x90)

எதிர்வரும் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 100 முதல் 150 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை பெய்யும் என திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் களனி கங்கை, ஜின் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகல ஓயா போன்றவற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும், இக்கங்கைகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் அறிக்கையொன்றை வெளியிட்டு ள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget