Ads (728x90)

சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுனர் அறிவித்துள்ளார்.

நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் இன்று காலை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சினால் நியமனங்கள் வழங்கப்பட்டு இருக்குமாயின் அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget