Ads (728x90)

நான் தேர்தலை கண்டு அஞ்சுபவன் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எவ்வித அச்சமும் அடையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் எந்த நடவடிக்கைகளையும் எடுப்போம். தேர்தலின் பின்னர் சுதந்திரமான சமூகம் ஒன்றை எம்மால் உருவாக்க முடிந்தது.

இன்று வெள்ளை வான்களுக்கு யாரும் பயம் இல்லை. வெள்ளை வான் காலம் முடிந்து விட்டது. நாடாளுமன்ற அமர்வுகளை பார்க்க முடிகின்றது. நாங்கள் சரியா? தவறா? என்று தீர்மானிக்க முடிகின்றது.

யோசனைகள் வந்தால் செவிமடுக்க தயார். உடன்பாட்டுக்கு வந்ததும் செயற்படுத்தவும் தயார் என மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget