தேர்தல் பிரசாரத்தின் போது தான் தெரிவித்த கருத்தை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக ஒவ்வொரு பத்திரிகைகளிடமும் தலா ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி தனது சட்டத்தரணியூடாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தான் இவ்வாறான கருத்தை தெரிவிக்கவில்லை என்பதுடன் திரிபுபடுத்தியே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
சிங்கள மக்களை தோற்கடிப்பதற்காக தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாக அருண பத்திரிகை 2019 நவம்பர் 12 ஆம் திகதியும், சிலோன் டுடே மற்றும் மவ்பிம ஆகிய பத்திரிகைகள் 2019 நவம்பர் 13 ஆம் திகதியும் மேற்படி பொய்யான செய்தியை பிரசுரித்துள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி அப்பட்டமான பொய்யாகும்.
அச்செய்திகள் இனவாதம், விரோதம் அல்லது வன்முறையை தூண்டுவதாக அமைந்திருக்கும் இன வெறுப்பின் பிரச்சாரம் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த பத்திரிகைகள் தனது மறுப்பை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment