Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாகவும், வாக்கு எண்ணும் மையங்களாகவும் பயன்படுத்தப்படவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து பாடசாலைகளும் இன்று மாலை கிராமசேவகர்களிடம் ஒப்படைக்கப்படும் என கல்வியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, றோயல் கல்லூரி, கம்பாஹா பத்தலகேதர் வித்யலோகா மகா வித்தியாலயம், களுத்துறை வடக்கு முசாயஸ் கல்லூரி, கண்டி மொடல் பாடசாலை, மாத்தறை கிறிஸ்ட் சேர்ச் கல்லூரி, நுவரெலிய காமினி தேசிய கல்லூரி, மாத்தளை சுஜாதா வித்தியாலயம், காலி புனித அலோயஸ் கல்லூரி, ஹம்பாந்தோட்ட சுவி தேசிய பாடசாலை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு  இந்துக் கல்லூரி, குருநாகல் சேர் ஜோன் கொத்தலவல கல்லூரி, மலியதேவ ஆண்கள் கல்லூரி, புத்தளம் சென் ஆண்ட்ரூஸ் மத்திய கல்லூரி, பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம், ஷீனன் ஆரம்பப்பாடசாலை, அனுராதபுரம் மத்திய கல்லூரி, பதுளை மத்திய கல்லூரி,  விசாகா பெண்கள் உயர்பாடசாலை, மொனராகல றோயல் கல்லூரி, கேகாலை  ஸ்வர்ணா ஜெயந்தி மகா வித்தியாலயம், கேகலு பாலிகா வித்தியாலயம் ஆகியவை நவம்பர் 16 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget