பதவியை இராஜிநாமா செய்தார் பிரதமர்!
ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இன்று ஜனாதிபதியைச் சந்தித்து உத்தியோகபூர்வமாக, இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் அலரி மாளிகையிலிருந்தும் வெளியேறினார்.
பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக நம் நாட்டில் ஜனநாயகம், மனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றியுள்ளோம். இது நாட்டின் நிலையான வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தது.
19 வது திருத்தம் அனைத்து நிறுவனங்களையும் அரசியல் மயமாக்கலில் இருந்து விடுவித்தது. இதன் விளைவாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமானதாகவும், நியாயமான முறையில் நடத்தும் திறனும் இருந்தது. நாம் செய்ததைப் பற்றி எதிர்காலம் சரியான தீர்ப்பை வழங்கும்.
நான் நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினேன். பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இருந்தாலும், ராஜபக்ஷக்கு மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொண்டு அவரது அரசாங்கத்தை நிறுவ முடிவு செய்துள்ளோம்.
நான் ஜனநாயகத்தை மதிக்கிறேன். ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அதன்படி, புதிய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை உருவாக்க அனுமதித்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன்.
நான் பிரதமராக இருந்த காலத்தில் பாராட்டும் கிடைத்தது. அவமானமும் கிடைத்தது. எனது பணியில் எனக்கு உதவிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment