Ads (728x90)

2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது. நாடு முழுவதிலும் 4,987 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப்பரீட்சையில் 7,17,008 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். வரலாற்றிலேயே கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறையே ஆகக் கூடுதலான பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சை அனுமதி அட்டையுடன் ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, பசறை, நுவரெலியா மற்றும் வலப்பனை பிரதேசத்தில் கல்விப் பொதுத் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்குச் சென்று பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனர்த்த நிலையின் காரணமாக பரீட்சைக்கு தேற்றுவதில் இடையூறு இருக்குமாயின் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவரச தொலைபேசி இலக்கமான 117 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget