அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு அல்ல முழு ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாக கட்டான பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மிலேனியம் சவால், எக்ச, சோபா மற்றும் சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தம் என அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் இலங்கையில் முக்கியத்துவமுடைய தினமான சுதந்திர தினத்தில் கிழித்தெறிவதற்கு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். இதுவே 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையாகும் என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

Post a Comment