Ads (728x90)

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் விமான பயணிகள் அனைவருக்கும் இன்று முதல் விசேட படிவமொன்று வழங்கப்பட்டு அவர்களது தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளமை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில தகவல்களை பெறும் நோக்கில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது வரை குறித்த படிவம் சீனாவிலிருந்து வருகை தந்த பயணிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட வந்த நிலையில், இன்று முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை இன்று பிற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget